(லியோன்)
கிறிஸ்து பிறப்பு விழாவை
முன்னிட்டு கிழக்குமாகாண பறங்கியர் சங்கத்தின் ஒளிவிழா நிகழ்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது .
கிழக்குமாகாண பறங்கியர் சங்கத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் ஒளிவிழா நிகழ்வு பறங்கியர் சங்க தலைவர் டெரன்ஸ் செல்லர் தலைமையில் நேற்று மாலை மட்டக்களப்பு தேவநாயகம்
மண்டபத்தில் இடம்பெற்றது .
ஆரம்ப நிகழ்வாக பறங்கியர் சங்க உறுபினர்களின் சிறுவர்களினால்
நிகழ்வுக்கு வருகை தந்த
அதிதிகளை மலர் செண்டு வழங்கி
அழைத்து
வரப்பட்டனர் .
அதனை தொடர்ந்து இறைவணக்கத்துடன் கிழக்குமாகாண பறங்கியர் சங்கத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் ஒளிவிழா கலை நிகழ்வுகள்
இடம்பெற்றது .
ஒளிவிழா
நிகழ்வில்
பிரதம
விருந்தினராக
மட்டக்களப்பு
மறை மாவட்ட ஆயர்
கலாநிதி பொன்னையா ஜோசப்
கலந்துகொண்டார் .
இந்நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு கல்லடி 231வது பாதுகாப்பு பிரிவு கட்டளை அதிகாரி
லெப்டினல்
கேணல்
ரோஹான் ராஜபக்ச , மேஜர்
அனுர துனதிலக
, கேணல் சம்பத் லியனகே , முன்னால் கிழக்குமாகாண பறங்கியர் சங்க தலைவர் சனி ஒக்கஸ் மற்றும்
ஒளிவிழா நிகழ்வுக்கு வருகை தந்த கிழக்கு மாகாண பறங்கியர் சங்க உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் .
இடம்பெற்ற ஒளிவிழா நிகழ்வில் பறங்கியர் பாரம்பரிய கலாசாரத்தை பிரதிபலிக்கும் நடன நிகழ்வுகளும் , கலாச்சார மொழியிலான பாடல்களும் இடம்பெற்றதுடன்
, பாடசாலை மாணவர்களில்
ஐந்தாம் தரம் புலமைப்பரிசில் மற்றும்
கல்வி பொது தராதர
சாதாரண பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கும்
பசில்களும் , கிறிஸ்து பிறப்பு
விழாவை முன்னிட்டு பறங்கியர் சங்க உறுப்பினர்களின் விதவை
பெண்களுக்கான
வருடாந்தம் வழங்கப்படும் கொடுப்பனவுகளும்
வழங்கிவைக்கப்பட்டது.