இளைஞர் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணம் வழங்கும் நிகழ்வு

வளமான இளைஞர் சமுதாயத்தினை கட்டியெழுப்பும் வகையில் இளைஞர்களை வலுவூட்டும் வேலைத்திட்டத்தின் கீழ் பல்வேறு நிகழ்வுகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இளைஞர் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் டேபா மண்டபத்தில் நடைபெற்றது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் பிளன் இன்டர் நஷனல் அமைப்பும் இணைந்து இந்த திட்டத்தினை முன்னெடுத்துவருகின்றது.

இதன்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட 32 இளைஞர் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் நைரூஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண பணிப்பாளர் சுகத் ஹேமவிதாரண,மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவி அரசாங்க அதிபர் எஸ்.ரங்கநாதன்,மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரதேச செயலாளர் வி.தவராஜா,; பிளன் இன்டர் நஷனல் அமைப்பின் கிழக்கு மாகாண இணைப்பாளர் டேவிட் சதானந்தன்,கல்குடா இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஜெபக்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இளைஞர்களை வலுவூட்டும் வகையில் பல்வேறு விளையாட்டுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் இளைஞர் சேவைகள் மன்ற உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.