ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் திருவாசகமுற்றோதல் நிகழ்வு

திரும்வெம்பாவையை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் திருவாசக முற்றோதல் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
ஆலயத்தின் வண்ணகர் சி.அரசரெட்னம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பெருமளவான அடியார்கள் கலந்துகொண்டு திருவாசகமுற்றோதலில் ஈடுபட்டனர்.