(முகம்மட் சஜீ)
காத்தான்குடி நகர சபை 12 வட்டாரங்களாக பிரிக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோளை இராஜாங்க அமைச்சர் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் நேற்று எல்லை நிர்ணயம் தொடர்பான ஆணைக்குழு முன் சமர்ப்பித்தார்.
எதிர்வருகின்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக வட்டாரங்கள் பிரிக்கப்பட்டு வருகின்ற சூழ்நிலையில் காத்தான்குடி நகர சபை தற்போது 10 வட்டாரங்களாக பிரிக்கப்பட்டு வர்த்மானி மூலம் பிரகடனம் செய்யப்பட்டிருக்கிறது. எனினும் கடந்த ஆட்சிக்காலத்தின் போது இவைகள் 12 வட்டாரங்களாக பிரிக்கப்பட்டு 12 வட்டாரங்களாக முன் மொழியப்பட்டு அங்கீகரிக்கப்பட்டிருந்த்து.
எனினும் தற்பொழுது இது10 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டு வர்த்தமானியில் உள்வாங்கப்பட்டுள்ளது. எனவே இந்த 28000 வாக்காளர்களையும் சுமார் 48000 மக்கள் தொகையும் கொண்ட காத்தான்குடி நகர சபையை ஆகக் குறைந்தது 12 வட்டாரங்களாக பிரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நேற்று மீள் குடியேற்ற புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் எல்லைகள் மீள் நிர்ணயம் தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் தலைவர் அசோக பீரிஸ் அதன் செயலாளர் பொரள்ளஸ் ஆகியோர் முன்னிலையில்நேற்று தன்னுடைய கோரிக்கைகளை முன்வைத்தார்.
இது தொடர்பாக இலங்கையினுடைய பல்வேறு பட்ட பிரதேசங்களில் சுமார் 14000 மக்களுக்கு 11 12 உறுப்பினர்கள் வழங்கப்பட்டிருக்கிறது.
காத்தான் குடியை விடவும் குறைவான சனத்தொகையையும் குறைவான நிலப்பரப்பையும் கொண்ட பல பிரதேசங்களுக்கு கூடுதலான வட்டாரங்கள் பிரிக்கப்பட்ட சூழ்நிலையில் காத்தான்குடி நகரசபை போன்ற 28000 வாக்காளர்களையும் சுமார் 48000 பொது மக்களையும் கொண்ட காத்தான்குடி நகரசபை ஆகக் குறைந்தது 12 வட்டாரங்களாக பிரிக்கப்படுகின்ற போதே எதிர் காலத்தில் இலகுவாக தங்களுடைய பணிகளை செய்ய முடியும்.
எனவே காத்தான்குடி நகர சபை 12 வட்டாரங்களாக பிரிக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோளை இராஜாங்க அமைச்சர் நேற்று விடுத்தார்