நாவக்குடா பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் பயணிகள் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்

 ( லியோ )      

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  கல்முனை பிராதன வீதியின் நாவக்குடா பகுதியில்  இன்று பிற்பகல் வாகன விபத்து இடம்பெற்றுள்ளதாக  காத்தான்குடி பொலிசார்  தெரிவிக்கின்றனர்

 மட்டக்களப்பில் இருந்து கல்முனையை நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு  சொந்தமான பஸ் வண்டி   நாவக்குடா  பகுதியில் பயணிகளை ஏற்றிகொண்டிருந்த  வேளையில்  மட்டக்களப்பில் இருந்து காத்தான்குடி  நகரை நோக்கி சென்ற டிப்பர் வாகனம்  பஸ் வண்டியின் பின்புறமாக   மோதியதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர் .


இடம்பெற்ற வாகன விபத்தில்  பஸ்ஸில் பயணித்த பயணிகளுக்கும்   , வாகன சாரதிகளுக்கும்  எதுவித காயங்களும் இன்றி மயிரிழையில் உயிர் தப்பியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர் .

இந்த  வாகன விபத்து தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.