மட்டக்களப்பு பஸ் நிலையத்தில் கஞ்சாவுடன் இரு இளைஞர்கள் கைது

மட்டக்களப்பு நகரில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கஞ்சா கலந்து போதைப்பொருளுடன் இளைஞர்கள் இருவரை கைதுசெய்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு பஸ் நிலையத்திற்கு முன்பாக நின்றுகொண்டிருந்த இருவரை சோதனையிட்டபோதே கஞ்சா மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஓட்டமாவடியை சேர்ந்த குறித்த நபர்களிடம் இருந்து 100 கிராம் கஞ்சா கலநத போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாகவும் குறித்த இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட இளைஞர்கள் இருவரும் 18 மற்றும் 22 வயதினையுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான விசாரணையை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்துவருகின்றனர்.