தமிழ் நாட்டு கலைஞர்களினால் கௌரவிக்கப்பட்ட இலங்கை தமிழ் கலைஞர்கள் -மட்டக்களப்பில் நடைபெற்றது

தமிழ்நாட்டு கலைஞர்களினால் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள தமிழ் கலைஞர்களை கௌரவிக்கும் வகையில் வேல்ஸ் சினிமா பட்டறையின் ஏற்பாட்டில் பாலுமகேந்திரா திறைப்பட விழா நேற்று சனிக்கிழமை மாலை மட்டக்களப்பில் நடைபெற்றது.

செங்கலடி வேல்ஸ் நடனக்கல்லூரியும் வேல்ஸ் சினிமா பட்டறையும் இணைந்து இந்த நிகழ்வினை மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடாத்தியது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன்,தமிழ்நாட்டின் பிரபல இயக்குனர் சுரேஸ் ஆகியோர் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் இந்தியாவின் உதவி இயக்குனர்கள்,தொழில் அதிபர்களும் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வின்போது 50க்கும் மேற்பட்ட இலங்கை திரைப்படத்துறை கலைஞர்கள் வேல்ஸ் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
சிறந்த நடிகர்,சிறந்த நடிகை,சிறந்த பாடகர்,சிறந்த பாடகி,சிறந்த இயக்குனர்,சிறந்த தயாரிப்பாளர்,சிறந்த குநற்திரைப்படம்,வாழ்நாள் சாதனையாளர் உட்பட பல விருதுகள் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.

இந்த நிகழ்வின்போது இலங்கையில் இருந்து சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற கலைஞர்களின் நிகழ்வுகளும் நடைபெற்றதுடன் செங்கலடி வேல்ஸ் நடனக்கல்லூரி மாணவர்களின் நடன நிகழ்வுகளும் நடைபெற்றன.

இலங்கையின் திரைப்பட துறை வரலாற்றில் முதன்முறையாக தமிழ் நாட்டு கலைஞர்களினால் இலங்கை தமிழ் கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டது இதுவே முதல்முறையாகும்.