மட்டக்களப்பு,பட்டிருப்பு தேர்தல் தொகுதியின்; ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் அமைப்பாளரும் அவுஸ்ரேலிய தமிழ் கொமினிட்டியின் தலைவரும் சமூக சேவையாளருமான ந.சிவராசா அவுஸ்ரேலியாவில் நேற்று திங்கட்கிழமை காலமானார்.
அவுஸ்ரேலியாவின் மெல்பேர்ன் நகரில் வசித்துவரும் இவர் கடந்த சில தினங்களாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு பயினியர் வீதியை சேர்ந்த இவர் முன்னாள் பொலிஸ் அதிகாரி என்பதுடன் ஐக்கிய தேசிய கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளராக நீண்டகாலம் கடமையாற்றியுள்ளார்.
மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலையின் முன்னாள் பிரதி அதிபர் திருமதி பாக்கியலட்சுமியின் கணவரும் ஆவார்.
நாளை புதன்கிழமை உடலம் Allison Monkhouse, Funeral Home, Corner Stud Rd & Burwood Hwy, Wantirna VIC 3152, Australia. பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு.நாளை மறுதினம் வியாழக்கிழமை Springvale Botanical Cemetery, 600 Princes Hwy, Springvale VIC 3171, Australia இல் நல்லடக்கம் செய்யப்படும்.
யுத்த சூழ்நிலையின்போது பல படையினரால் கைதுசெய்யப்பட்ட பல தமிழ் இளைஞர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கையெடுத்துவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவுஸ்ரேலியாவின் மெல்பேர்ன் நகரில் வசித்துவரும் இவர் கடந்த சில தினங்களாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு பயினியர் வீதியை சேர்ந்த இவர் முன்னாள் பொலிஸ் அதிகாரி என்பதுடன் ஐக்கிய தேசிய கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளராக நீண்டகாலம் கடமையாற்றியுள்ளார்.
மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலையின் முன்னாள் பிரதி அதிபர் திருமதி பாக்கியலட்சுமியின் கணவரும் ஆவார்.
நாளை புதன்கிழமை உடலம் Allison Monkhouse, Funeral Home, Corner Stud Rd & Burwood Hwy, Wantirna VIC 3152, Australia. பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு.நாளை மறுதினம் வியாழக்கிழமை Springvale Botanical Cemetery, 600 Princes Hwy, Springvale VIC 3171, Australia இல் நல்லடக்கம் செய்யப்படும்.
யுத்த சூழ்நிலையின்போது பல படையினரால் கைதுசெய்யப்பட்ட பல தமிழ் இளைஞர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கையெடுத்துவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.