மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிமுன்மாரி பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை வெள்ளத்தினால் அடித்துச்செல்லப்பட்டு குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று காலை மகிழடித்தீவில் இருந்து தாந்தாமலை,நாற்பதுவட்டைக்கு சென்ற விமல் என்றழைக்கப்படும் அழகையா செனவிரட்ன (38வயது)என்ற குடும்ஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு பெய்த கடும் மழை காரணமாக மாவடி முன்மாரி பகுதியில் உள்ள வீதிக்கு மேலால் சென்ற நீரில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் அடித்துச்செல்லப்பட்டவர் அப்பகுதியில் உள்ள பாலம் ஒன்றிக்கு கீழ் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
இன்று காலை மகிழடித்தீவில் இருந்து தாந்தாமலை,நாற்பதுவட்டைக்கு சென்ற விமல் என்றழைக்கப்படும் அழகையா செனவிரட்ன (38வயது)என்ற குடும்ஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு பெய்த கடும் மழை காரணமாக மாவடி முன்மாரி பகுதியில் உள்ள வீதிக்கு மேலால் சென்ற நீரில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் அடித்துச்செல்லப்பட்டவர் அப்பகுதியில் உள்ள பாலம் ஒன்றிக்கு கீழ் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.