மாங்காய் பறிக்க சென்ற ஆசிரியர் குளவிகொட்டி உயிரிழப்பு-குருக்கள்மடத்தில் சம்பவம்

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி சிகிச்சை பெற்றுவந்தவர் உயிரிழந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.


திருமலை ஊரியன்கட்டு தமிழ் மகா வித்தியாலய ஆசிரியரான மகாலிங்கம் - ரவி என்பவர் குருக்கள்மடத்தினை பிறப்பிடமாகவும் திருகோணமலை - நிலாவெளி - போபாலபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட இவர் உறவினர்களின் திருமண நிகழ்விற்காக திருமலையில் இருந்து குருக்கள்மடத்திற்கு வருகை தந்திருந்தனர்.

இதன்போது அவரின் உறவினர்களின் வீட்டில் உள்ள மாமரமொன்றில் மாங்காய் பறிப்பதற்காக 07.11.2015 ஏறிய போது அதிலிருந்த குளவி கொட்டியதனால் சிகிச்சைகளுக்காக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைளில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக 09.11.2015 திகதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று செவ்வாய்க்கிழமை மரணமடைந்துள்ளார்.