(
லியோ )
மட்டக்களப்பு விவசாய திணைக்களத்தினால் கல்லடி மத்திய வலய விவசாயத்தினைக்கள போதனாசிரியர் பிரிவின் கீழ் வீட்டுத்தோட்ட பயிர்செய்கையில் ஈடுபட்டுள்ள வீட்டுத்தோட்ட உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் விவசாய திணைக்களம் பல ஊக்குவிப்பு திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர் .
இதன் கீழ் மட்டக்களப்பு கல்லடி விவசாய
விரிவாக்கல் போதனாசிரியர் பிரிவின் கீழ் வரும் குமாரபுரம் கிராமத்தில் பயிர்ச்செய்கையினை மேற்கொண்டுள்ள த .தர்மலிங்கத்தின் மாதிரி தோட்டத்தில் இன்று அறுவடை நிகழ்வும், பயனாளிகளுக்கு வீட்டுத் தோட்டத்திற்கான விவசாய உள்ளீடுகள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது .
இந்நிகழ்வு
கல்லடி விவசாயப் போதனாசிரியார் திருமதி . டி
.ரமேசன் ஏற்பாட்டில் மாவட்ட
விவசாய திணைக்கள பிரதி
விவசாயப்பணிப்பாளர் ஆர் . கோகுலதாசன் தலைமையில்
இடம்பெற்றது .
இந்நிகழ்வில்
மத்திய விவசாய உதவி
பணிப்பாளர் வி .பேரின்பராஜா, விவசாய திணைக்கள போதனாசிரியர்கள் மற்றும்
வீட்டுத்தோட்ட
பயனாளிகள் கலந்துகொண்டனர் .