குமாரபுரம் மாதிரி தோட்டத்தில் அறுவடை நிகழ்வு

 (  லியோ )

மட்டக்களப்பு   விவசாய திணைக்களத்தினால் கல்லடி   மத்திய  வலய   விவசாயத்தினைக்கள போதனாசிரியர் பிரிவின் கீழ்   வீட்டுத்தோட்ட பயிர்செய்கையில் ஈடுபட்டுள்ள   வீட்டுத்தோட்ட  உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை  மேம்படுத்தும் நோக்குடன்  விவசாய திணைக்களம்  பல ஊக்குவிப்பு திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர் .

இதன் கீழ்   மட்டக்களப்பு கல்லடி விவசாய விரிவாக்கல் போதனாசிரியர் பிரிவின் கீழ் வரும் குமாரபுரம்  கிராமத்தில்  பயிர்ச்செய்கையினை மேற்கொண்டுள்ள   .தர்மலிங்கத்தின் மாதிரி   தோட்டத்தில்  இன்று அறுவடை  நிகழ்வும்,   பயனாளிகளுக்கு வீட்டுத் தோட்டத்திற்கான விவசாய உள்ளீடுகள் வழங்கும் நிகழ்வும்  இடம்பெற்றது .

இந்நிகழ்வு  கல்லடி விவசாயப் போதனாசிரியார்  திருமதி . டி .ரமேசன் ஏற்பாட்டில் மாவட்ட விவசாய திணைக்கள பிரதி விவசாயப்பணிப்பாளர் ஆர் . கோகுலதாசன் தலைமையில்  இடம்பெற்றது

இந்நிகழ்வில்  மத்திய விவசாய உதவி பணிப்பாளர் வி .பேரின்பராஜா, விவசாய திணைக்கள போதனாசிரியர்கள்  மற்றும்  வீட்டுத்தோட்ட  பயனாளிகள்  கலந்துகொண்டனர் .