மட்டக்களப்பு மறைக்கோட்டத்தின் ஏற்பாட்டில் கல்லறை பெருநாள் அனுஸ்டிப்பு

கத்தோலிக்க கிறிஸ்தவ மக்களின் கல்லறைப்பெருநாள் மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறப்பாக முறையில் அனுஸ்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட மறைக்கோட்டத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு கல்லியங்காடு கிறிஸ்த மயானத்தில் இன்று திங்கட்கிழமை மாலை கல்லைப்பெருவிழா சிறப்பாக நடைபெற்றது.

இறந்த உறவுகளை நினைவுகூர்ந்த அவர்களின் ஆத்ம ஈடெற்றத்திற்காக வருடாந்தம் இந்த நிகழ்வு சிறப்பாக நடாத்தப்பட்டுவருகின்றது.

மட்டக்களப்பு மாவட்ட மறைக்கோட்டத்தின் முதல்வர் அருட்தந்தை ஏ.தேவதாசன் அடிகளாரின் தலைமையில் இதன்போது திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் அருட்தந்தையர்கள் அருட்சகோதரிகள்,பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டதுடன் திருப்பலியும் ஓப்புக்கொடுக்கப்பட்டது.
இதன்போது கல்லறைகள் அலங்கரிக்கப்பட்டு உறவினர்களினால் ஒளியேற்றி வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

இதேபோன்று புளியடிக்குடா சேமக்காலையில் மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப்ஆண்டகை தலைமையில் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு நிகழ்வுகள் நடைபெற்றன.