அரச உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் கட்ட வழிகாட்டல் செயலமர்வு

(லியோ 

 மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் வழிகாட்டலுக்கு அமைவாக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி  நிதி திட்ட  அனுசரணையுடன்  பொது நிர்வாக அமைச்சின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட  செயலகமும் மண்முனை வடக்கு பிரதேச செயலகமும்  இணைந்து  ஏற்பாடு செய்த  அரச உத்தியோகத்தர்களுக்கான  இரண்டாம் கட்ட வழிகாட்டல்   செயலமர்வு  மண்முனை வடக்க பிரதேச செயலாளர்  வி .தவராஜா தலைமையில் செயலக டேபா மண்டபத்தில்  இன்று இடம்பெற்றது.

அரச நிர்வாகம்மாவட்ட நிர்வாகம் , பிரதேச நிர்வாகம்  மற்றும் கிராமிய நிர்வாக   மட்டத்தில்    திட்டமிடலை மிகச்சிறந்த வினைத்திறனான செயற்பாடாக மாற்றுவதற்கு குழுக்களை அமைத்து  அந்த குழுக்களின் ஊடாக  அரச  உத்தியோகத்தர்கள் வினைத்திறனான  செயற்பாட்டை  அமைச்சரவை மட்டத்திலும் ,மாவட்ட மட்டத்திலும் ,பிரதேச மட்டத்திலும் மற்றும் கிராம மட்டத்திலும் அமைக்கப்பட்ட  குழுக்களின்  ஊடாக தரவுகளை பெற்று அந்த தரவுகளின் அடிப்படையில் தேவையான திட்டங்களை முன்மொழிந்து அதன் அடிப்படையில் ஐந்தாண்டு திட்டத்தினை நடைமுறை படுத்துவதற்கான   வழிகாட்டல்  செயலமர்வே  இன்று   இடம்பெற்றது

இன்று இடம்பெற்ற செயலமர்வில் வளவாளர்களாக மண்முனை வடக்கு பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர்  ஆர் . ஜதிஸ்குமார் மற்றும்  வவுணதீவு  பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் டி . நிர்மல்ராஜ்  ஆகியோர் கலந்துகொண்டனர் .
 
இந்த செயலமர்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட  அரச அலுவலக உத்தியோகத்தர்கள் , சமுர்த்தி வங்கி  உத்தியோகத்தர்கள் , பொருளாதார அபிவிருத்தி  உத்தியோகத்தர்கள்  மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் .