மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் ஒளிவிழா

பாடசாலைகளில் பரீட்சைகள் மற்றும் விடுமுறை காலம் என்பதன் காரணமாக இன்று திங்கட்கிழமை தொடக்கம் பாடசாலைகளில் ஒளிவிழா நிகழ்வுகள் நடாத்தப்பட்டுவருகின்றன.


மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் ஒளிவிழா நிகழ்வு பாடசாலை ஒன்றுகூடல் மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றது.

பாடசாலை அதிபர் நிமல்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை ஏ.தேவதாஸன் அடிகளார் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இதன்போது விசேட ஆராதனைகள் நடைபெற்றதுடன் ஜேசு கிறிஸ்துவின் பிறப்பு மற்றும் அற்புதங்களை குறிக்கும் நிகழ்வுகள் நடைபெற்றன.