கல்லடி,உப்போடை விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலயத்தின் “விவேகா நல்வழி” சஞ்சிகை வெளியீடு

மட்டக்களப்பு,கல்லடி,உப்போடை விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலயத்தில் தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு விவேகாவின் நல்வழி இதழ் வெளியீடும் பரிசளிப்பு நிகழ்வும் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.


விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலயத்தின் அதிபர் திருமதி திலகவதி ஹரிதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு வலய பிரதிக்கல்வி பணிப்பாளர் ஜனாப் ஐதர் அலி பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

ஆன்மீக அதிதியாக மட்டக்களப்பு இராம கிருஸ்ண மிசனை சேர்ந்த சுவாமி ஸ்ரீமத் பிரபு பிரபானந்தாஜி மகராஜ் கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு வலய உதவிக்கல்விப்பணிப்பாளர் த.யுவராஜன்,உடற்கல்வி உதவி பணிப்பாளர் வி.லவகுமார்,கல்லடி,உப்போடை பேச்சியம்மன் சித்திவிநாயர் ஆலய முகாமையாளர் ஹரிதாஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு இராம கிருஸ்ண மிசனை சேர்ந்த சுவாமி ஸ்ரீமத் பிரபு பிரபானந்தாஜி மகராஜுக்கு முதல் பிரதி வழங்கப்பட்டு சஞ்சிகை வெளியிட்டுவைக்கப்பட்டது.

சஞ்சிகையின் நயவுரையினை விசேட கல்வி உதவிக்கல்விப்பணிப்பாளர் முருகு தயானந்தன் நிகழ்த்தினார்.

இதன்போது தேசிய வாசிப்பு மாதத்தினையொட்டி நடாத்தப்பட்ட கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசுகளும் வழங்கிவைக்கப்பட்டன.