வின்சன்ட் பெண்கள் உயர்தர பாடசாலையின் ஒளிவிழா நிகழ்வுகள்

(லியோ )

மட்டக்களப்பு மாவட்டத்தில்  கிறிஸ்து  பிறப்பு  விழாவை  முன்னிட்டு  மார்கழி  மாதத்தில்  ஒளிவிழா  கொண்டாட்டங்கlள்   இடம்பெற்று  வருகின்றது.

  
இன்று மட்டக்களப்பு   வின்சன்ட் பெண்கள்  உயர்தர  பாடசாலையின்  ஒளிவிழா  நிகழ்வுகள் இன்று காலை  10.00 மணியளவில்  அதிபர் திருமதி .ஆர் .கனகசிங்கம் தலைமையில்   பாடசாலை மண்டபத்தில்  நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு   பிரதம  விருந்தினர்களாக  மட்டக்களப்பு  அமிர்தகழி கப்பலேந்தி அன்னை ஆலய பங்குதந்தை  சி .வி .அன்னதாஸ்ஓய்வு நிலை கோட்டக்கல்வி அதிகாரி .டேவிட் ,ஓய்வுநிலை  கல்விப்பணிப்பாளர் . . எம் . . போல் மற்றும்  அரச அதிகாரிகள் ,அருட்தந்தையர்கள் பாடசாலை மாணவர்கள் ,ஆசிரியர்கள் ,பெற்றோர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் .

 நிகழ்வில்  கிறிஸ்து பிறப்பை பிரதிபலிக்கு  வகையில் மாணவர்களின்  ஒளிவிழா நிகழ்வுகளும் கரோல் கீதங்களும் இடம்பெற்றது .

ஒளிவிலாவில் கலந்து கொண்ட    பிரதம  விருந்தினர்களின்  சிறப்பு  ஒளிவிழா செய்திகளும்    நத்தார்  தாத்தாவின்  ஒளிவிழா கொண்டாட்ட  நிகழ்வுகளும்  இடம்பெற்றதுடன்   மாணவர்களுக்கு  பரிசுகள்  வழங்கப்பட்டது .