மார்கழி மாதத்தின் முதல் ஒளிவிழா நிகழ்வு

( லியோ )

மட்டக்களப்பு மாவட்டத்தில்  கிறிஸ்து  பிறப்பு  நிகழ்வினை   முன்னிட்டு  மார்கழி  மாதத்தில்  ஒளிவிழா  கொண்டாட்டங்களும்  பல  விசேட நிகழ்வுகளும்   இடம்பெற்று  வரும்  வேளையில்  மட்டக்களப்பு   ஆனைப்பந்தி மகளிர்  கல்லூரியின்  ஒளிவிழா  நிகழ்வுகள் இன்று காலை  09.00 மணியளவில்  அதிபர் திருமதி . .உதயகுமார்  தலைமையில்   பாடசாலை மண்டபத்தில்  நடைபெற்றது.


 இந்நிகழ்வுக்கு   பிரதம  விருந்தினர்களாக  மட்டக்களப்பு  வீச்சுகல்முனை   புனித அன்னம்மாள்   ஆலய பங்குதந்தை  எக்ஸ் . .ரஜீவன் , வீச்சுகல்முனை புனித அன்னம்மாள் வித்தியாலய அதிபர் .புனிதராஜ் , மிருக வைத்திய அதிகாரி எஸ் .தவராஜா , ஓய்வு நிலை கோட்டக்கல்வி அதிகாரி .டேவிட் , பாடசாலை பழைய மாணவர் சங்க உறுப்பினர் திருமதி .ஆர் .இராமநாதன் ,பாடசாலை பழைய மாணவர்கள் ,ஆசிரியர்கள் ,பெற்றோர்கள் ,பாடசாலை மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் .

நிகழ்வில்  கிறிஸ்து பிறப்பை பிரதிபலிக்கு  வகையில் மாணவர்களின்  ஒளிவிழா நிகழ்வுகளும் கரோல் கீதங்களும் இடம்பெற்றது .

இடம்பெற்ற ஒளிவிழா  நிகழ்வில் கலந்துகொண்ட    பிரதம  விருந்தினர்களினால்  சிறப்பு  ஒளிவிழா  செய்திகளை  மாணவர்களுக்கு வழங்கியதோடு   பரிசில்களையும்  வழங்கி  வைத்தனர் .