( லியோ )
மட்டக்களப்பு மாவட்டத்தில் கிறிஸ்து
பிறப்பு
நிகழ்வினை முன்னிட்டு
மார்கழி
மாதத்தில்
ஒளிவிழா
கொண்டாட்டங்களும்
பல
விசேட நிகழ்வுகளும் இடம்பெற்று
வரும்
வேளையில் மட்டக்களப்பு
ஆனைப்பந்தி மகளிர் கல்லூரியின் ஒளிவிழா
நிகழ்வுகள் இன்று காலை
09.00 மணியளவில் அதிபர் திருமதி .த
.உதயகுமார் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு
பிரதம
விருந்தினர்களாக
மட்டக்களப்பு
வீச்சுகல்முனை
புனித அன்னம்மாள் ஆலய பங்குதந்தை எக்ஸ் .ஐ
.ரஜீவன் , வீச்சுகல்முனை புனித அன்னம்மாள் வித்தியாலய அதிபர் .புனிதராஜ் , மிருக வைத்திய அதிகாரி
எஸ் .தவராஜா , ஓய்வு
நிலை கோட்டக்கல்வி அதிகாரி
.டேவிட் , பாடசாலை பழைய
மாணவர் சங்க உறுப்பினர் திருமதி .ஆர் .இராமநாதன் ,பாடசாலை பழைய மாணவர்கள் ,ஆசிரியர்கள் ,பெற்றோர்கள் ,பாடசாலை
மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் .
நிகழ்வில்
கிறிஸ்து பிறப்பை பிரதிபலிக்கு வகையில் மாணவர்களின் ஒளிவிழா நிகழ்வுகளும் கரோல் கீதங்களும் இடம்பெற்றது .
இடம்பெற்ற ஒளிவிழா நிகழ்வில் கலந்துகொண்ட பிரதம
விருந்தினர்களினால்
சிறப்பு
ஒளிவிழா
செய்திகளை
மாணவர்களுக்கு வழங்கியதோடு பரிசில்களையும்
வழங்கி
வைத்தனர் .