(லியோ )
கிழக்கு
மாகாண கல்விப் பணிப்பாளர் . எம் .டி .எ
.நிசாம்
தலைமையில் நடத்தப்பட்ட கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான 2015 ஆண்டுக்கான விஞ்ஞான வினாடி
வினாப் போட்டி கடந்த 07 ஆம் திகதி
அக்கரைப்பற்று மத்திய கல்லூரியில் நடைபெற்றது .
மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு கல்வி வலயத்தில் இருந்து
கலந்துகொண்ட பாடசாலைகளில்
புனித மிக்கேல் கல்லூரி
.புனித சிசிலியா பெண்கள்
கல்லூரி மற்றும் வின்சன்ட் பெண்கள் உயர்தர பாடசாலைகள் வெற்றிகளை பெற்றுக்கொண்டன .
தமிழ் மொழி மூலமாக இடம்பெற்ற போட்டிகளில் மட்டக்களப்பு கல்வி வலயம்
முதல் வலயமாக வெற்றியை பெற்றுக்கொண்டது .
தமிழ் மொழி போட்டியில் தரம் 06 இல் பங்கு பற்றிய
புனித மிக்கேல் கல்லூரி முதல் இடத்தினையும் , தரம்
08 இல் பங்கு பற்றிய
புனித சிசிலியா பெண்கள்
கல்லூரி
03ஆம் இடத்தினையும் , தரம்
09, தரம்
10 இல் பங்கு பற்றிய
புனித சிசிலியா பெண்கள்
கல்லூரி
முதல் இடத்தினையும் பெற்றுக்கொண்டது .
ஆங்கில மொழி போட்டிகளில் தரம் 06. தரம்
09 இல் பங்கு
பற்றிய வின்சன்ட் பெண்கள்
பாடசாலை முதல் இடத்தினையும் , தரம் 10 இல் பங்கு
பற்றிய புனித சிசிலியா பெண்கள் கல்லூரி 03ஆம் இடத்தினையும் பெற்றுக்கொண்டது .
இடம்பெற்ற பாடசாலைகளுக்கிடையிலான
போட்டிகளின்
தரப்படுத்தலின் அடிப்படையில் தமிழ் மொழி மூலமான
விஞ்ஞான வினாடி வினாப்
போட்டிகளில்
முதல் இடத்தினை மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள்
கல்லூரியும் , ஆங்கில மொழி
மூலமான விஞ்ஞான வினாடி
வினாப் போட்டிகளில் முதல் இடத்தினை மட்டக்களப்பு வின்சன்ட் பெண்கள் உயர்தர
பாடசாலையும் பெற்றுக்கொண்டது .
வெற்றிகளை பெற்றுக்கொண்ட பாடசாலைகளுக்கான
வெற்றிக்கிண்ணத்தை மட்டக்களப்பு கல்வி
வலய விஞ்ஞான படத்திற்கான பொறுப்பாசிரியாரும் ,ஆசிரிய ஆலோசகருமான .ப .சர்வேஸ்வரன் பெற்றுக்கொண்டார்.
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையில் நடத்தப்பட்ட 2015 ஆண்டுக்கான
விஞ்ஞான வினாடி வினாப்
போட்டிகளில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு கல்வி வலயத்தில் இருந்து
கலந்துகொண்டு
வெற்றிகளை பெற்று மட்டக்களப்பு கல்வி வலயத்திற்கும் , மட்டக்களப்பு கல்வி வலய
பாடசாலைகளுக்கும்
பெருமையினை பெற்றுத்தந்த ஆசிரியர்களுக்கும் ,மாணவர்களுக்கும் மட்டக்களப்பு கல்வி வலய
பணிப்பாளர் .கே பாஸ்கரனும் ,பாடசாலை
சமூகமும் , பாடசாலைகளின் ஆசிரியர்களும் , மாணவர்களும் மற்றும் பெற்றோர்க பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கின்றனர்.