அரச உத்தியோகத்தர்களுக்கான நிர்வாக வழிகாட்டல் செயலமர்வு

( லியோ )    

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் வழிகாட்டலுக்கு அமைவாக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி  நிதி திட்ட  அனுசரணையுடன்  பொது நிர்வாக அமைச்சின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட  செயலகமும் மண்முனை வடக்கு பிரதேச செயலகமும்  இணைந்து  ஏற்பாடு செய்த  அரச உத்தியோகத்தர்களுக்கான வழிகாட்டல் செயலமர்வு  மண்முனை வடக்க பிரதேச செயலாளர்  வி .தவராஜா தலைமையில் செயலக டேபா மண்டபத்தில்  இடம்பெற்றது.

அரச நிர்வாகம்  கிராமிய , பிரதேச , மாவட்ட  மட்டத்தில்    திட்டமிடலை மிகச்சிறந்த வினைத்திறனான செயற்பாடாக மாற்றுவதற்கு  அரச  உத்தியோகத்தர்கள் வினைத்திறனான  செயற்பாட்டை  செயல் படவேண்டும்  என்பது தொடர்பாக  அரச உத்தியோகத்தர்களுக்கான வழிகாட்டல்  செயலமர்வு  இடம்பெற்றது .

இடம்பெற்ற செயலமர்வில் வளவாளர்களாக மண்முனை வடக்கு பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர்  ஆர் . ஜதிஸ்குமார் மற்றும்  வவுணதீவு  பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் டி . நிர்மல்ராஜ்  ஆகியோர் கலந்துகொண்டனர் .
 
இந்த செயலமர்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட  அரச அலுவலக உத்தியோகத்தர்கள் , சமுர்த்தி வங்கி  உத்தியோகத்தர்கள் , பொருளாதார அபிவிருத்தி  உத்தியோகத்தர்கள்  மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர் .