ஏறாவூரில் இடம்பெற்ற விபத்தில் மூவர் காயம்

மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் நகரில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவர் காயமடைந்த நிலையில் ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக ஏறாவூர் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணையை ஏறாவூர் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.