மட்டக்களப்பில் தொடர்ச்சியான மழையினால் 470 பேர் இடம்பெயர்வு

பெரு மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் மட்டக்களப்பு வாகரைப் பிரதேச செயலகப் பிரிவில் 148 குடும்பங்களைச் சேர்ந்த 470 பேர் இடம்பெயர்ந்திருப்பதாகவும் இவர்களுக்கு சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருவதாகவும் பிரதேச செயலாளர் எஸ்.ஆர். ராகுலநாயகி தெரிவித்தார்.


கட்டுமுறிவு கிராம சேவையாளர் பிரிவைச் சேர்ந்த ஆண்டான்குளம், கட்டுமுறிவு, தோணிதாட்டமடு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 148 குடும்பங்கள் தமது இருப்பிடங்களில் வெள்ளநீர் பாய்வதால் கட்டுமுறிவு அரசாங்கப் பாடசாலையில் தங்க வைக்கப்பட்டு;ளளார்கள்.

இந்த மூன்று கிராமங்களுக்குமான போக்குவரத்தும் பிரதான நிலப்பகுதியிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளதால் தோணி மூலம் சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருவதாகவும் பிரதேச செயலாளர் மேலும் தெரிவித்தார்.

இடம் பெயர்ந்த மக்களுக்கான சுகாதார வசதிகளும் அதிகாரிகள் மூலம் செய்யப்பட்டள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சனிக்கிழமை பெய்த பலத்த மழை காரணமாக இந்தக் கிராமங்களை வெள்ளம் சூழ்ந்து கொண்டது.