இருதயபுரம் கிழக்கு வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கியில் வாணி விழா

மட்டக்களப்பு  இருதயபுரம்  கிழக்கு  வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கியில்   வாணி  விழா மிகவும்  சிறப்பாக  இன்று பிற்பகல்  அலுவலகத்தில் இடம்பெற்றது

இன்று பிற்பகல் 01.00 மணியளவில்  ஜெயந்திபுரம் குமாரத்தன் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சிவறேகன் சர்மாவின்  சமய  கிரிகைகளுடன்  சிறப்பு தீபாராதனை பூஜை இடம்பெற்றது ..                                                                                                                 

இந்த    சிறப்பு  வாணி விழா பூஜை  நிகழ்வு  சமுர்த்தி முகாமையாளர்  திருமதிஇருதயதாசன் குமுதினி  தலைமையின்  அனைத்து   வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கி உத்தியோகத்தர்கள் , வங்கி  வெளிக்கள  உத்தியோகத்தர்கள் , வங்கி  கட்டுப்பாட்டுப்  சபை உறுப்பினர்கள்  ஆகியோரின் பங்களிப்புடன்   மிகவும்  சிறப்பாக  இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது .