பட்டிருப்பு-வெல்லாவெளி வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டிருப்பு –வெல்லாவெளி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.


நேற்று மாலை இரண்டு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கோவில்போரதீவில் இருந்து களுவாஞ்சிகுடிக்கு வந்த மோட்டார் சைக்கிளும் களுவாஞ்சிகுடியில் இருந்து வெல்லாவெளிக்கு சென்ற மோட்டார் சைக்கிளும் இவ்வாறு மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த இருவரும் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இது தொடர்பான விசாரணையை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.