மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் சமூக சேவைகள் திணைக்களத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் சமூகசேவைகள் திணைக்களத்தின் புதிய கட்டிடத்துக்கான அடிக்கல் இன்று வெள்ளிக்கிழமை காலை நடப்பட்டது.

இன்று காலை மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சமூகசேவைகள் திணைக்கள உத்தியோகத்தர் கே.அருள்மொழி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் இந்த கட்டிடம் அமைக்கப்படுவதற்கு 4.9மில்லியன் ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளதாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா தெரிவித்தார்.

பிரதேச செயலகத்தின் சமூக சேவைகள் பிரிவிற்கு பல்வேறு தேவைகள் கருதிவருவோர் தமது தேவையினை விரைவாக நிறைவுசெய்யவும் அலைச்சலை தவிர்த்துக்கொள்ளவும் இதன்மூலம் வழியேற்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.