( லியோன் ) தேசிய நூலக வாரத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் பாடசாலைகளில் பல வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன .
இவ்வாரத்தினை சிறப்பிக்கும் முகமாக இன்று பாடசாலையில் விசேட நிகழ்வு இடம்பெற்றது .
இந்நிகழ்வில் அதிதிகளாக கலாநிதி .ஒ .கே .குணநாதன் மற்றும் வலய கல்வி பிரதி பணிப்பாளர் , கிராம சேவை உத்தியோகத்தர், மட்டக்களப்பு மாநகர நூலக பொறுப்பதிகாரி ஆகியோர் கலந்து கொண்டனர் .
இந்நிகழ்வில் உரை ஆற்றிய பாடசாலை அதிபர் இவ்வாறான வாசிப்புக்கள் மாணவர்கள் மத்தியிலே இருகின்ற வாசிப்பு பழக்கத்தை மேன்படுத்தவும் , மாணவர்களின் எதிர் காலத்தில் வாசிப்பு எவ்வாறு இவர்களை முழு நிறைவாக்கும் , வாசிப்பின் முக்கியத்துவம் போன்ற விடயங்கள் மாணவர் மத்தியில் உணர்த்துவதற்காக மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துக்கொண்டார் .
இவ்வாறான வேலைத்திட்டத்தினை இப் பாடசாலையில் நடத்துவதற்கு ஊக்கமும் பேருதவியாக இருந்த ஆசிரியர்களுக்கும், இதற்கு முழு பங்களிபு நல்லகிய பாடசாலை மாணவர்களுக்கும் அதிபர் பாராட்டுகளை தெரிவித்துக்கொண்டார் .