மட்டக்களப்பு இலங்கை வங்கி வாணி விழா நிகழ்வு

( லியோன் )   மட்டக்களப்பு  இலங்கை  வங்கி  பிரதான அலுவலகத்தின்   வாணி  விழா  நிகழ்வு இன்று மாலை  இடம்பெற்றது

இன்று மாலை 04.30  மணியளவில்  வங்கி சிரேஷ்ட  முகாமையாளர்  எம். . நௌபல்   தலைமையின் வாணி  விழா  நிகழ்வுகள்  மிக சிறப்பாக இடம்பெற்றதுடன்  வங்கி வாணி விழா சிறப்பு பூஜை நிகழ்வுகள்  சிவஸ்ரீ டி . சரவணபவன் சர்மாவின்  சமய  கிரிகைகளுடன்  சிறப்பான தீபாராதனை பூஜைகளுடன் இடம்பெற்றது ..                                                                                                                 

இடம்பெற்ற     சிறப்பு  வாணி விழா பூஜை  நிகழ்வில் கிழக்கு மாகாண உதவிப் பொது முகாமையாளர்    W.W.R.W.M. சிறில் பண்டாரவங்கி  அலுவக அனைத்து   உத்தியோகத்தர்கள் , வங்கி  வெளிக்கள  உத்தியோகத்தர்கள் , வங்கி  கட்டுப்பாட்டுப்  சபை உறுப்பினர்கள் மற்றும் வங்கி முதலீடாளார்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.