( லியோன் ) மட்டக்களப்பு இலங்கை வங்கி பிரதான அலுவலகத்தின் வாணி விழா நிகழ்வு இன்று மாலை இடம்பெற்றது .
இன்று மாலை 04.30 மணியளவில் வங்கி சிரேஷ்ட முகாமையாளர் எம். ஐ . நௌபல் தலைமையின் வாணி விழா நிகழ்வுகள் மிக சிறப்பாக இடம்பெற்றதுடன் வங்கி வாணி விழா சிறப்பு பூஜை நிகழ்வுகள் சிவஸ்ரீ டி . சரவணபவன் சர்மாவின் சமய கிரிகைகளுடன் சிறப்பான தீபாராதனை பூஜைகளுடன் இடம்பெற்றது ..
இடம்பெற்ற சிறப்பு வாணி விழா பூஜை நிகழ்வில் கிழக்கு மாகாண உதவிப் பொது முகாமையாளர் W.W.R.W.M. சிறில் பண்டார , வங்கி அலுவக அனைத்து உத்தியோகத்தர்கள் , வங்கி வெளிக்கள உத்தியோகத்தர்கள் , வங்கி கட்டுப்பாட்டுப் சபை உறுப்பினர்கள் மற்றும் வங்கி முதலீடாளார்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.