( லியோன் )
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகம் 2015 ஆம் ஆண்டுக்கான சர்வதேச புகைத்தல் ஒழிப்பு மாதத்தில் சேமிக்கப்பட்ட நிதியிலிருந்து மண்முனை வடக்கு பிரதேச செயலக வாழ்வின் எழுச்சி சமூக அபிவிருத்தி மன்றத்தினால் தெரிவு செய்யப்பட வறிய குடும்பங்களுக்கான நிதி உதவி வழங்கும் திட்ட ஆரம்பிக்கப்பட்டுள்ளது .
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகம் 2015 ஆம் ஆண்டுக்கான சர்வதேச புகைத்தல் ஒழிப்பு மாதத்தில் சேமிக்கப்பட்ட நிதியிலிருந்து மண்முனை வடக்கு பிரதேச செயலக வாழ்வின் எழுச்சி சமூக அபிவிருத்தி மன்றத்தினால் தெரிவு செய்யப்பட வறிய குடும்பங்களுக்கான நிதி உதவி வழங்கும் திட்ட ஆரம்பிக்கப்பட்டுள்ளது .
இதன் அடிப்படையில் இருதயபுரம் வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கி ஊடாக தெரிவு செய்யப்பட 84 பாடசாலை மாணவர்களுக்கான மாதாந்தம் வழங்கப்படும் சிசுதிரிய புலமைப்பரிசில் தொகை இன்று வழங்கி வைக்கப்பட்டது .
இந்நிகழ்வில் மண்முனை வடக்கு முகாமைத்துவ பணிப்பாளர் திருமதி . கிரிதராஜ் நிர்மலா ,மண்முனை வடக்கு சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ் .விஜயகுமாரன் மற்றும் இருதயபுரம் வங்கி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர் .