(லியோன் )
தேசிய வாசிப்பு மாதத்தின் இறுதி நாள் நிகழ்வுகள் இன்று மட்டக்களப்பு கல்லடி சிவானந்த தேசிய பாடசாலையின் அதிபர் கே . மனோராஜ் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது .
தேசிய வாசிப்பு மாதத்தின் இறுதி நாள் நிகழ்வுகள் இன்று மட்டக்களப்பு கல்லடி சிவானந்த தேசிய பாடசாலையின் அதிபர் கே . மனோராஜ் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது .
இன்று இடம்பெற்ற நிகழ்வானது மாணவர்கள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கவும் வாசிப்பின் ஊடாக சிறந்த சமூகத்தை உருவாகும் நோக்கிலும் , மாணவர்களுக்கு வாசிப்பு தொடர்பான தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டு மாணவர்களுக்கிடையில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றமானவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டது .இந்நிகழ்வின் போது பாடசாலை மாணவர்களின் கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றது .
இந்நிகழ்வில் ஆன்மீக அதிதியாக கல்லடி இராமகிருஷ்ண மிஷன் தலைவர் சுவாமி சதுர்புஜானந்தஜி கலந்துகொண்டதுடன் , இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண நூலக விஞ்ஞான ஒருங்கிணைப்பாளரும் , விரிவுரையாளருமான கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட நூலக அதிகாரி டப்ளியு .ஜெ . ஜெயராஜ் ,கௌரவ அதிதியாக மண்முனை வடக்கு கோட்டக்கல்வி அதிகாரி எ .சுகுமாரன் சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு கல்வி வலய உதவி கல்விப்பணிப்பாளர் ( தமிழ் ) டி .யுவராஜா மற்றும் இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள் , பாடசாலை மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் .
தேசிய வாசிப்பு மாதத்தில் சிறந்த வகுப்பறை நூலகமாக தெரிவு செய்யப்பட வகுப்பறைகளுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டதுடன், தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு பாடசாலையில் நடத்தப்பட்ட போட்டி பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது .