பிரதேச அபிவிருத்தி வங்கியின் ஏற்பாட்டில் சிறுவர் மற்றும் ஊழியர் கௌரவிப்பு நிகழ்வு

மட்டக்களப்பு பிரதேச அபிவிருத்தி வங்கியின் ஏற்பாட்டில் சிறுவர் மற்றும் ஊழியர் கௌரவிப்பு நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை காலை மட்டக்களப்பில் நடைபெற்றது.


மட்டக்களப்பு செல்வநாயகம் மண்டபத்தில் மட்டக்களப்பு மாவட்ட பிரதேச அபிவிருத்தி வங்கியின் பிராந்திய தலைமையகத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

பிரதேச அபிவிருத்தி வங்கியின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் கே.சந்தானம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஊவா மற்றும் கிழக்கு பிராந்தியத்திற்கான பொதுமுகாமையாளர் ஈ.ரி.எம்.எஸ்.குமார,உதவி பொதுமுகாமையாளர் பி.கே.தர்மதாச உட்பட பிராந்திய கிளை முகாமையாளர்களும் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகள் பிரதேச அபிவிருத்தி வங்கியின் மட்டக்களப்பு கிளை முகாமையாளர் எஸ்.சத்தியநாதனால் மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன் நிகழ்ச்சிகள் அவரினால் தொகுத்துவழங்கப்பட்டது.

இந்த நிகழ்வின்போது 2015ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 15 மாணவர்கள் பாராட்டி பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் வங்கியில் கெக்குளு கணக்கினை கொண்டிருந்த ஆறு சிறுவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளும் வழங்கிவைக்கப்பட்டன.

அத்துடன் இந்த நிகழ்வின்போது 250 சிறுவர்கள் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் வங்கியின் அடைவ மட்டத்திற்கு சிறப்பான சேவையாற்றிய ஊழியர்கள்,வங்கி முகாமையாளர்களும் கௌரவிக்கப்பட்டனர்.