அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவன் க.டிபானுசன் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி

(சிறிகரன்)

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலய  மாணவன் கணேசமூர்த்தி - டிபானுசன்  என்ற மாணவன் 155 புள்ளிகளை பெற்று புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்று தனது பாடசாலைக்கும், கிராமத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இப்பாடசாலையின் அதிபர் மாணவனை கற்பித்த  ஆசிரியர்களுக்கும் ஏனைய அமைப்புக்கள் ,கல்வி சாரா நிறுவனங்களின் வளவாளர்களுக்கும்  க.டிபானுசனின் பெற்றோர் தமது நன்றிகளை தெரிவித்தனர்.