புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


நேற்று புதன்கிழமை மாலை புதுக்குடியிருப்பில் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று வேகத்தினை கட்டுப்படுத்த முனைந்தபோது விபத்துக்குள்ளானதாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் புதுக்குடியிருப்பு,கூட்டுறவு வீதியை சேர்ந்த கோ.தனுஸ்ப்பிரியன்(19வயது) என்பவரே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் இன்று வியாழக்கிழமை பிற்பகல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.