(லியோன் ) மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் வழிகாட்டலுக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்ட “அகம் “ நிறுவனத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்களுக்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன .
இதன் கீழ் “அகம் “ நிறுவனத்தினால் கிழக்கு பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வரும் வவுணதீவு , வெல்லாவெளி ,பட்டிப்பளை , கிரான் ஆகிய பகுதி பல்கலைக்கழக மாணவர்களில் தெரிவு செய்யப்பட மாணவர்களுக்கு கல்விக்கான ஊக்குவிப்பு தொகை வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் .பி எஸ் .எம் .சார்ள்ஸ் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றது .
இந்நிகழ்வில் மாவட்ட செயலக உதவி திட்டமிடல் இணைப்பாளர் அ. சுதர்சன் , மட்டக்களப்பு மாவட்ட அகம் நிறுவன இணைப்பாளர் தங்கராசா திலீப்குமார் , நிறுவன திட்ட இணைப்பாளர் திருமதி . எஸ்.நிரஞ்சனி மற்றும் நிறுவன உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர் .
இந்நிகழ்வில் கலந்துகொண்ட கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் தாங்கள் முகம் கொடுகின்ற பிரச்சினைகள் தொடர்பாக அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர் .
இதன் போது இவர்கள் முன்வைத்த பிரச்சினைகளை கேற்றரிந்து கொண்ட அரசாங்க அதிபர் இது தொடர்பாக உரிய அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு தீர்வினை பெற்றுத்தருவதாக மாணவர்களுக்கு தெரிவித்துக்கொண்டார் .