இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் நவராத்திரி விழா நிகழ்வு

( லியோன்)   மட்டக்களப்பு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள ஏற்பாட்டில் இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி எழில் வாணி பத்மகுமாரின் ஒழுங்கமைப்பில்  நவராத்திரி விழா இன்று பிற்பகல் நாவக்குடா இந்து கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது .


 கல்வி,செல்வம்,வீரம் ஆகியவற்றை  கொண்டு  விளங்கும் முப்பெரும் தேவிகளுக்குரிய தினமாக இந்த நவராத்திரி தினம் ஒன்பது நாட்கள் அனுஸ்டிக்கப்படுகின்றது.

இதனை முன்னிட்டு நாவக்குடா இந்து கலாசார மண்டபத்தில் சிறப்பு பூசைகள் நிகழ்வுகள் சைவப்புலவர் சித்தாந்த வித்தகர் திருமதி .சிவானந்தஜோதி ஞானசூரியத்தினால் நடத்தப்பட்டது .


 இந்நிகழ்வில் அதிதியாக  சிவயோகர் செல்வன் சாம்பசிவம் சிவாச்சாரியார் , மற்றும்  மட்டக்களப்பு மாவட்ட அறநெறி பாடசாலை மாணவர்கள் ,ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர் .

இடம்பெற்ற நவராத்திரி விழா நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அறநெறி பாடசாலை மாணவர்களின் கலை கலாச்சார நிகழ்வுகள் இடம்பெற்றது .