கருவப்பங்கேணி விபுலானந்தா மகா வித்தியாலய மாணவர்களுக்கு சின்னஞ்சூட்டும் நிகழ்வு

(அமிர்தகழி நிருபர்)

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கருவப்பங்கேணி விபுலானந்தா மகா வித்தியாலய  மாணவ தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வும், பாடசாலை ஆசிரியர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்வும் இன்று பாடசாலையில் இடம்பெற்றது .


மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கருவப்பங்கேணி விபுலானந்தா மகா வித்தியாலய சமூகம் மேற்கொண்ட முயற்சியாலும் ,வலய கல்விப் பணிப்பாளரின் ஆலோசனைக்கு அமைவாகவும் இப்பாடசாலை எதிர் வரும் தினங்களில் புதிய மாற்றத்துடன் கல்லூரியாக பெயர் மாற்றப்பட்டு எதிர்வரும் காலங்களில் செயல்படவிருகின்றது .

இம்மாற்றத்தின் பாடசாலை செயல்பாடுகளுக்கு  அமைவாக  வித்தியாலய அதிபர் ஞா. சபேஸ்வரன் தலைமையில் மாணவ தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வும், பாடசாலை ஆசிரியர்களுக்கும் அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது .

இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள் ,மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர் .