கொக்குவில் அருள்மிகு ஸ்ரீவீரம்மாகாளியம்மன் திருச்சடங்கினை ஒட்டி ஆலய பால்குட பவனி

மட்டக்களப்பு கொக்குவில் அருள்மிகு ஸ்ரீவீரம்மாகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கினை ஒட்டி நேற்று காலை மாபெரும் பால்குட பவனி நடைபெற்றது.


மட்டக்களப்பு நகரில் உள்ள வீரகத்தி பிள்ளையார் ஆலயத்தில் ஆரம்பமாகிய பால்குட பவனியானது திருமலை வீதியூடாக கொக்குவில் வீரம்மாகாளியம்மன் ஆலயத்தினை வந்தடைந்தது.

ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கானது வியாழக்கிழமை இரவு கதவு திறத்தலுடன் ஆரம்பமானது.

ஏழு தினங்கள் நடைபெறவுள்ள இந்த ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கில் அலங்கார சடங்கு,கும்பச்சடங்கு,ஊர்வலச்சடங்கு,கலியாணச்சடங்கு,பள்ளையச்சடங்கு என சடங்குகள் தினமும் நடைபெறவுள்ளது.

இதனை ஒட்டியே இன்று காலை இந்த பால்குட பவனி நடைபெற்றதுடன் இந்த பால்குட பவனியானது மேள தாளங்களுடன் ஒயிலாட்டம்,மயிலாட்டம் காவடியாட்டம் மற்றும் யானை பவனியுடன் நடைபெற்றமை சிறப்பசமாகும்.