மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான வைத்திய சான்றிதழ் நடமாடும் சேவை

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள விசேட தேவையுடையவர்கள் சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளும் வகையில் மருத்துவச்சான்றிதழ் வழங்கும் விசேட நடமாடும் சேவை இன்று சனிக்கிழமை காலை மட்டக்களப்பு,கல்லடியில் உள்ள தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகத்தில் நடைபெற்றது.


மாற்றுத்திறனாளிகள் கடந்த சுயதொழில்களை மேற்கொள்வதற்கும் அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டினையும் கருத்தில் கொண்டு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவைகள் திணைக்களத்தின் அனுசரணையுடன் ஹபீட் மற்றும் ஹன்டிக்கப் இன்ரநசனல் இணைந்து இந்த நடமாடும் சேவையினை நடாத்தியது.

இதன்போது சாரதி அனுமதிப்பத்திரம் தகுதியுடைய விசேட தேவையுடையவர்களுக்கு சோதனைகள் செய்யப்பட்டு மருத்துவச்சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இந்த நடமாடும்; சேவையில் மருத்துவச்சான்றிதழ்களை வழங்கிவைப்பதற்காக தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகத்தின் தலைமையக மருத்துவர்கள் வருகைதந்திருந்தமை சிறப்பம்சமாகும்.

இதன்போது 100க்கும் மேற்பட்ட விசேட தேவையுடையவர்கள் இந்த போக்குவரத்து மருத்துவ சான்றிதழ்களுக்கு விண்ணப்பித்திருந்தனர்.