மட்டக்களப்பின் பிரபல பெண்கள் பாடசாலை மாணவிகளை கடத்த முற்பட்டதாக புகார் –பொலிஸார் விசாரணை

மட்டக்களப்பு நகரில் உள்ள இரு பெண்கள் பாடசாலையில் மாணவியர்கள் இருவரை கடத்த முற்பட்டதாக கிடைக்கப்பெற்ற தகவல்கள் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.


பெற்றோர் தெரிவித்த முறைப்பாட்டின் அடிப்படையில் மட்டக்களப்பு பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இன்று செவ்வாய்க்கிழமை காலை வானில் வந்தோர் இந்த கடத்தல் முயற்சியை கொண்டதாக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து இது தொடர்பான தீவிர விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

இது தொடர்பில் இரண்டு பிரபல பெண்கள் பாடசாலைக்கும் சென்ற மட்டக்களப்பு பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.