கிரிக்கட் சுற்றுப்போட்டியில் ஆரையம்பதி அணி வெற்றி

தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் மண்முனை வடக்கு பிரதேச இளைஞர் சம்மேளனமும் இணைந்து நடாத்திய மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியில் ஆரையம்பதி அணி இந்த ஆண்டுக்கான சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டது.


மட்டக்களப்பு இந்துக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நேற்று காலை இந்த சுற்றுப்போட்டிகள் ஆரம்பமானது.இந்த சுற்றுப்போட்டியில் 16 கழகங்கள் பங்குகொண்டன.

வவுணதீவு,மண்முனை வடக்கு,காத்தான்குடி,ஆரையம்பதி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கழகங்கள் இந்த போட்டியில் பங்குகொண்டன.

இதன்கீழ் இறுதிப்போட்டிக்கு மண்முனை வடக்கு பிரதேச அணியும் ஆரையம்பதி பிரதேச அணியும் தெரிவாகியது.ஐந்து ஓவர்கள் கொண்ட இந்த சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில் ஆரையம்பதி பிரதேச அணி வெற்றிபெற்றது.

இறுதி பரிசளிப்பு நிகழ்வு நேற்று சனிக்கிழமை மாலை மாவட்ட இளைஞர் சேவைகள் மன்ற உத்தியோகத்தர் திருமதி நிசாந்தினி அருள்மொழி தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு வெற்றிக்கிண்ணத்தினை வழங்கிவைத்தார்.