மட்டக்களப்பு , மண்முனைப்பற்று பிரதேச சபையினால் நேற்று செவ்வாய்க்கிழமை வீதிகளில் நின்றுகொண்டிருந்தபோது பிடிக்கப்பட்டு அடைக்கப்பட்டிருந்த மாடுகளை வேலிகளை வெட்டி மர்டுகளை அகற்றியதற்கு எதிராக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை ஆரையம்பதி மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் நின்றுகொண்டிருந்த 50க்கும் மேற்பட்ட மாடுகள் மண்முனைப்பற்று பிரதேசசபையினால் பிடிக்கப்பட்டு சாண்டோ சங்கரதாஸ் மைதானத்தில் அடைக்கப்பட்டிருந்தது.
மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் மண்முனைப்பற்று பிரதேசசபைக்குட்பட்ட பகுதிகளில் வீதிகளில் மாடுகள் அலைவதனால் விபத்துச்சம்பவங்கள் அதிகரித்துவருவதாக குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டுவந்தன.
இது தொடர்பில் மண்முனைப்பற்று பகுதிகளில் உள்ள கால் நடை வளர்ப்பாளர்களுக்கு மண்முனைப்பற்று பிரதேசசபையினால் பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதுடன் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.
கடந்த காலத்திலும் வீதிகளில் திரியும் கட்டாக்காலி மாடுகள் பிடிக்கப்பட்டு கால்நடை வளர்ப்பாளர்களுக்கு தண்டம் விதிக்கப்பட்டபோதிலும் தொடர்ச்சியாக கட்டாக்காலி மாடுகள் வீதிகளில் நடமாடியேவந்தது.
இந்த நிலையில் நேற்று பிரதேசசபையின் செயலாளரின் தலைமையில் பிரதான வீதியில் திரிந்த சுமார் 53 மாடுகள் பிடிக்கப்பட்டு சாண்டோ சங்கரதாஸ் மைதானத்தில் அடைக்கப்பட்டிருந்தன.
இந்த நடவடிக்கையின்போது கால்நடை வளர்ப்பாளர் ஒருவர் பிரதேசசபை ஊழியர்களுடனும் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு சாண்டோ சங்கரதாஸ் மைதானத்தின் பின்புறமாகவுள்ள வேலி கம்பிகள் வெட்டப்பட்டு அங்கிருந்து மாடுகள் அகற்றிச்செல்லப்பட்டுள்ளதாக பிரதேசசபை செயலாளரினால் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பிலான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
நேற்று செவ்வாய்க்கிழமை ஆரையம்பதி மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் நின்றுகொண்டிருந்த 50க்கும் மேற்பட்ட மாடுகள் மண்முனைப்பற்று பிரதேசசபையினால் பிடிக்கப்பட்டு சாண்டோ சங்கரதாஸ் மைதானத்தில் அடைக்கப்பட்டிருந்தது.
மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் மண்முனைப்பற்று பிரதேசசபைக்குட்பட்ட பகுதிகளில் வீதிகளில் மாடுகள் அலைவதனால் விபத்துச்சம்பவங்கள் அதிகரித்துவருவதாக குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டுவந்தன.
இது தொடர்பில் மண்முனைப்பற்று பகுதிகளில் உள்ள கால் நடை வளர்ப்பாளர்களுக்கு மண்முனைப்பற்று பிரதேசசபையினால் பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதுடன் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.
கடந்த காலத்திலும் வீதிகளில் திரியும் கட்டாக்காலி மாடுகள் பிடிக்கப்பட்டு கால்நடை வளர்ப்பாளர்களுக்கு தண்டம் விதிக்கப்பட்டபோதிலும் தொடர்ச்சியாக கட்டாக்காலி மாடுகள் வீதிகளில் நடமாடியேவந்தது.
இந்த நிலையில் நேற்று பிரதேசசபையின் செயலாளரின் தலைமையில் பிரதான வீதியில் திரிந்த சுமார் 53 மாடுகள் பிடிக்கப்பட்டு சாண்டோ சங்கரதாஸ் மைதானத்தில் அடைக்கப்பட்டிருந்தன.
இந்த நடவடிக்கையின்போது கால்நடை வளர்ப்பாளர் ஒருவர் பிரதேசசபை ஊழியர்களுடனும் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு சாண்டோ சங்கரதாஸ் மைதானத்தின் பின்புறமாகவுள்ள வேலி கம்பிகள் வெட்டப்பட்டு அங்கிருந்து மாடுகள் அகற்றிச்செல்லப்பட்டுள்ளதாக பிரதேசசபை செயலாளரினால் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பிலான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.