தேற்றாத்தீவில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து – சாரதி கைது

மட்டக்களப்பு,களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேற்றாத்தீவில் இன்று(18.05.2015) திங்கட்கிழமை மாலை 4.30 மணியவில் வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.


செட்டிபாளையம் நோக்கி பயணித்தவரே இவ்வாறு நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியில் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ் விபத்தினால் முச்சக்கர வண்டிக்கும் குடும்பஸ்தர் பயணித்த மோட்டார ;சைக்கிள்ளும் பெரும் பாதிப்புள்ளாகியது.

இப் விபத்து தொடர்பாக விசாரணையை மேற்கொண்ட களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிஸ்சார் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனத்தின் மீது பின்னால் வந்து விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிள் சாரதி மதுபோதையில் இருந்துள்ளதாகவும் இதன் காரணமாக சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் தொடர்பான சட்ட நடவடிக்கையெடுக்கப்படும் என தெரிவித்த பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.