இலங்கையில் தரமான கபடி வீரர்களைக்கொண்ட மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் திகழ்வதாக மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் எம்.உதயகுமார் தெரிவித்தார்.
நேற்று சனிக்கிழமை மாலை 6.00மணியளவில் மட்டக்களப்பில் 20வருடங்களுக்கு பின்னர் கபடி சங்கம் அமைக்கும் கூட்டம் எல்லை வீதியில் உள்ள மாநகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது மட்டக்களப்பு மாவட்ட கபடி சங்கம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளதுடன் அதற்கான நிர்வாகத்தெரிவும் நடைபெற்றது.
இந்த நிர்வாகத்தின் புதிய தலைவராக மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் தெரிவுசெய்யப்பட்டார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய ரீதியான கபடி அணியில் மட்டக்களப்பினை சேர்ந்த பலர் உள்ளபோதிலும் மட்டக்களப்பில் பலம் வாய்ந்த அணி உள்ள நிலையிலும் மாவட்டத்திற்கென கபடிச்சங்கம் இல்லாத நிலையே இருந்துவந்தது.
இதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கபடி வீரர்களின் பிரச்சினைகள் வெளிப்படுத்தப்படாத நிலையே இருந்துவந்ததுடன் கபடி வீரர்கள் ஒருங்கிணைக்கப்படாத நிலையும் இருந்தது.
எனினும் தற்போது மலர்ந்துள்ள புதிய கபடி சங்கத்தின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கபடி வீரர்களை ஒருங்கிணைத்து அவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழிவகைகள் எதிர்காலத்தில் இந்த சங்கம் மூலம் ஏற்படுத்தப்படவுள்ளது.
இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு கல்வி வலயத்தின் உதவி உடற்கல்வி பணிப்பாளர் வி.லவகுமார்,மட்டக்களப்பு மாவட்ட பதில் விளையாட்டு உத்தியோகத்தர் பி.ஜெயக்குமார்,தன்னாமுனை மியானி வள நிலையத்தின் பணிப்பாளர் அருட்தந்தை இருதயராஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது கபடி சங்கம் எதிர்காலத்தில் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
அத்துடன் மட்டக்களப்பில் கபடி வீரர்கள் தமது பயிற்சியை மேற்கொள்வதற்கு உரிய இடம் இல்லாத காரணத்தினால் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கிவருவதன் காரணமாக அதனை அமைப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொள்வது எனவும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.
இதேபோன்று இந்த ஆண்டு பாடசாலை மட்டத்திலும் கழகங்கள் மட்டத்திலும் கபடி சுற்றுப்போட்டிகளை நடாத்துவதுடன் பயிற்சி முகாம்களையும் மேற்கொள்வது எனவும் கபடி நடுவர்களை பதிவுசெய்து அவர்களுக்கான நடுவர் அந்தஸ்தை தகுதியுள்ளவர்களுக்கு பெற்றுக்கொடுக்கவும் இந்த கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பில் உள்ள கபடி வீரர்கள்,விளையாட்டு உத்தியோகத்தர்கள்,விளையாட்டுக்கழகங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
இதன்போது இந்த ஆண்டுக்கான நிர்வாக சபையும் தெரிவுசெய்யப்பட்டது.தலைவராக மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் தெரிவுசெய்யப்பட்டதுடன் செயலாளராக மதுவரித்திணைக்கள உத்தியோகத்தர் ஆர்.சகீவன்,உபதலைவர்களாக பி.ஜெயக்குமார்,வி.ஈஸ்பரன்,எஸ்.பவந்தன்,உபசெயலாளராக எஸ்.டிலக்ஸன்,பொருளாளராக எஸ்.தேவராஜன்,அணி முகாமையாளராக கே;.பிரேமன்,மாவட்ட அணி பயிற்றுவிப்பாளர்களாக எஸ்.முகுந்தன்.ரி.மதன் ஆகியோரும் பாடசாலைகளுக்கான இணைப்பாளர்களாக ரவீந்திரகுமார் மற்றும் விஜயஸ்ரீ ஆகியோரும் உடற்பயிற்றுவிப்பாளர்களாக ரி.சோமஸ்காந்தன்,தொழில்நுட்ப ஆலோசகரர்களாக எஸ்.ரூபராஜ்,வி.பூபாலராஜா,எஸ்.பிரசாந்த் ஆகியோரும் ஊடக இணைப்பாளராக ஊடகவியலாளர் வா.கிருஸ்ணகுமார்,வெளிநாட்டு இணைப்பாளராக எஸ்.ரூபாகரனும் சங்கத்தின் ஆலோசகர்களாக மட்டக்களப்பு கல்வி வலய உதவி உடற்கல்வி பணிப்பாளர் வி.லவகுமார்,அருட்தந்தை இருதயராஜ்,எஸ்.தவராஜாவும் நிர்வாகசபை உறுப்பினர்களாக ஒன்பது பேரும் தெரிவுசெய்யப்பட்டனர்.
தமிழர்களின் விளையாட்டாக கருதப்படும் கபடி விளையாட்டு நிகழ்வானது தமிழர்கள் மத்தியில் அருகிவருவதும் குறிப்பிடத்தக்கது.
நேற்று சனிக்கிழமை மாலை 6.00மணியளவில் மட்டக்களப்பில் 20வருடங்களுக்கு பின்னர் கபடி சங்கம் அமைக்கும் கூட்டம் எல்லை வீதியில் உள்ள மாநகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது மட்டக்களப்பு மாவட்ட கபடி சங்கம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளதுடன் அதற்கான நிர்வாகத்தெரிவும் நடைபெற்றது.
இந்த நிர்வாகத்தின் புதிய தலைவராக மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் தெரிவுசெய்யப்பட்டார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய ரீதியான கபடி அணியில் மட்டக்களப்பினை சேர்ந்த பலர் உள்ளபோதிலும் மட்டக்களப்பில் பலம் வாய்ந்த அணி உள்ள நிலையிலும் மாவட்டத்திற்கென கபடிச்சங்கம் இல்லாத நிலையே இருந்துவந்தது.
இதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கபடி வீரர்களின் பிரச்சினைகள் வெளிப்படுத்தப்படாத நிலையே இருந்துவந்ததுடன் கபடி வீரர்கள் ஒருங்கிணைக்கப்படாத நிலையும் இருந்தது.
எனினும் தற்போது மலர்ந்துள்ள புதிய கபடி சங்கத்தின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கபடி வீரர்களை ஒருங்கிணைத்து அவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழிவகைகள் எதிர்காலத்தில் இந்த சங்கம் மூலம் ஏற்படுத்தப்படவுள்ளது.
இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு கல்வி வலயத்தின் உதவி உடற்கல்வி பணிப்பாளர் வி.லவகுமார்,மட்டக்களப்பு மாவட்ட பதில் விளையாட்டு உத்தியோகத்தர் பி.ஜெயக்குமார்,தன்னாமுனை மியானி வள நிலையத்தின் பணிப்பாளர் அருட்தந்தை இருதயராஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது கபடி சங்கம் எதிர்காலத்தில் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
அத்துடன் மட்டக்களப்பில் கபடி வீரர்கள் தமது பயிற்சியை மேற்கொள்வதற்கு உரிய இடம் இல்லாத காரணத்தினால் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கிவருவதன் காரணமாக அதனை அமைப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொள்வது எனவும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.
இதேபோன்று இந்த ஆண்டு பாடசாலை மட்டத்திலும் கழகங்கள் மட்டத்திலும் கபடி சுற்றுப்போட்டிகளை நடாத்துவதுடன் பயிற்சி முகாம்களையும் மேற்கொள்வது எனவும் கபடி நடுவர்களை பதிவுசெய்து அவர்களுக்கான நடுவர் அந்தஸ்தை தகுதியுள்ளவர்களுக்கு பெற்றுக்கொடுக்கவும் இந்த கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பில் உள்ள கபடி வீரர்கள்,விளையாட்டு உத்தியோகத்தர்கள்,விளையாட்டுக்கழகங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
இதன்போது இந்த ஆண்டுக்கான நிர்வாக சபையும் தெரிவுசெய்யப்பட்டது.தலைவராக மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் தெரிவுசெய்யப்பட்டதுடன் செயலாளராக மதுவரித்திணைக்கள உத்தியோகத்தர் ஆர்.சகீவன்,உபதலைவர்களாக பி.ஜெயக்குமார்,வி.ஈஸ்பரன்,எஸ்.பவந்தன்,உபசெயலாளராக எஸ்.டிலக்ஸன்,பொருளாளராக எஸ்.தேவராஜன்,அணி முகாமையாளராக கே;.பிரேமன்,மாவட்ட அணி பயிற்றுவிப்பாளர்களாக எஸ்.முகுந்தன்.ரி.மதன் ஆகியோரும் பாடசாலைகளுக்கான இணைப்பாளர்களாக ரவீந்திரகுமார் மற்றும் விஜயஸ்ரீ ஆகியோரும் உடற்பயிற்றுவிப்பாளர்களாக ரி.சோமஸ்காந்தன்,தொழில்நுட்ப ஆலோசகரர்களாக எஸ்.ரூபராஜ்,வி.பூபாலராஜா,எஸ்.பிரசாந்த் ஆகியோரும் ஊடக இணைப்பாளராக ஊடகவியலாளர் வா.கிருஸ்ணகுமார்,வெளிநாட்டு இணைப்பாளராக எஸ்.ரூபாகரனும் சங்கத்தின் ஆலோசகர்களாக மட்டக்களப்பு கல்வி வலய உதவி உடற்கல்வி பணிப்பாளர் வி.லவகுமார்,அருட்தந்தை இருதயராஜ்,எஸ்.தவராஜாவும் நிர்வாகசபை உறுப்பினர்களாக ஒன்பது பேரும் தெரிவுசெய்யப்பட்டனர்.
தமிழர்களின் விளையாட்டாக கருதப்படும் கபடி விளையாட்டு நிகழ்வானது தமிழர்கள் மத்தியில் அருகிவருவதும் குறிப்பிடத்தக்கது.