மட்டக்களப்பில் முள்ளியவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வின் பிரதான நிகழ்வு வாகரையில்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்தில் உள்ள விளாவட்டவான் கிராமத்தில் முள்ளியவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று பிற்பகல் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.


தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளர் க.கோபாலபிள்ளையின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா,பா.அரியநேத்திரன்,கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம்,பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கோ.கருணாகரம்,கிருஸ்ணபிள்ளை மற்றும் கட்சி ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது ஈகச்சுடர் ஏற்றப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன் நினைவுரைகளும் நடைபெற்றன.