வந்தாறுமூலையில் நடைபெற்றுவந்த சென் ஜோன் அம்பியுலன்ஸ் இறுதி நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்ட சென் ஜோன் அம்பியுலன்ஸ் இறுதி நிகழ்வானது இன்று ஞாயிற்றுக்கிழமை பி.ப 1.00 மணியளவில் இனிதுடன் நிறைவேறியது.


கடந்த வெள்ளிக்கிழமை வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் ஆரம்பமான இந்த முகாம் தொடர்ச்சியாக மூன்று தினங்கள் நடைபெற்றது.

இந் நிகழ்விற்கு கல்குடா கல்விவலய பிரதிக்கல்விபணிப்பாளர் தி.ரவி (முகாமைத்துவம்;)அவர்களும், மாவட்ட ஆணையாளர் திரு சபா சுந்தரராஜா ஜே.பி அவர்களும்,சென் ஜோன் அம்பியுலன்ஸ் மட்டக்களப்பு
மாவட்டதலைவர் இக்னேசியஸ் லொயலா அவர்களும்,வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலய அதிபர் க.பைரதன் அவர்களும்,சென் ஜோன் அம்பியுலன்ஸ் உதவிமாவட்ட ஆணையாளர்கள்,படையணிகட்டளையிடும் அதிகாரி, இணை அத்தியட்சகர், பிரிவுஅத்தியட்சகர்கள், பிரிவு உத்தியோகஸ்தர்கள், அலுவலக அதிகாரிகள் மற்றும் சார்ஜன், கோப்ரல், அங்கத்தவர்கள், பாடசாலைகளுக்கு பொறுப்பான ஆசிரியர்கள்,சக பாடசாலை அதிபர்கள்,ஆசிரியர்கள்,மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்விற்கு 22 பாடசாலைகளில் இருந்து 362 மாணவர்களும், பொறுப்பாசிரியர்களும் பங்கேற்றனர்.