மட்டக்களப்பு சிறைச்சாலையில் 14 கைதிகள் வெசாக்தினத்தினை முன்னிட்டு விடுதலை

வெசான்தினத்தினை முன்னிட்டு நாடெங்கிலும் உள்ள சிறைச்சாலைகளில் இருந்து சிறு குற்றங்கள் செய்த சிறைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.


ஜனாதிபதி மைத்திபாலசிறிசேனவின் பணிப்புரைக்கமைய இந்த சிறைக்கைதிகளை விடுதலைசெய்யும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த சிறு குற்றங்கள் சிறைக்கைதிகளில் 14 சிறைக்கைதிகள் இன்று விடுதலைசெய்யப்பட்டனர்.

மட்டக்களப்பு சிறைச்சாலையின் ஆணையாளர் ஏ.பிரியங்கர ஆலோசனையின் கீழ் பிரதான ஜெயிலர் ஆர்.மோகனராஜாவின் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

புனித வெசாக் தினத்தினை முன்னிட்டு இந்த சிறைக்கைதிகள் விடுதலைசெய்யப்பட்டுள்ளதாக பிரதான ஜெயிலர் ஆர்.மோகனராஜா தெரிவித்தார்.