மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேச "மங்களகம" கிராம சேவகர் பிரிவில் சோபா நிறுவனமும் அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் உதவியுடனும் நேற்று திங்கட் கிழமை நடைபெற்ற கிறிக்கட் சுற்றுப் போட்டியில் மங்களகம விளையாட்டுக் கழகம்,மட்டு அம்பாரை வெண்புறா விளையாட்டுக் கழகம் மற்றும் ஏறாவூர் பிரதேச செயளக உத்தியோகஸ்த்தர்கள் அணியும் இந்த சுற்றுப் போட்டியில் பங்கு பற்றினர்.
அத்தோடு இந் நிகழ்வுக்கு அதிதிகளாக சோபா நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் திரு விக்கினேஸ்வரன் இவரோடு சோபா நிறுவனத்தின் அதிகாரிகளும் மங்களகம பாடசாலையின் அதிபர் மற்றும் பலர் கலந்து சிறப்பித்தனர்.
இந்த சுற்றுப் போட்டியில் முதலாம் இடத்தை வெண்புறா கழகத்தினர் தனதாக்க இரண்டாம்,மூன்றாம் இடங்களை ஏறாவூர் பிரதேச செயளக உத்தியோகஸ்தர்கள் மற்றும் மங்களகம அணியினர் தனதாக்கினர்.