மட்டக்களப்பில் இருந்துவெளிவரும் காலாண்டு இதலான தென்றல் சஞ்சிகையினால் பட்டிப்பளை பிரதேச ஐந்தாம் தர மாணவர்கள் மத்தியில் நடாத்திய புலமைப்பரிசில் முன்னோடிப்பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.
கொக்கட்டிச்சோலை இராம கிருஸ்ண வித்தியாலயத்தில் தென்றல் சஞ்சிகையின் ஆசிரியர் கிருபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
தென்றல் சஞ்சிகையானது தனது சஞ்சிகை வெளியீட்டைம ட்டும் கொண்டிருக்காமல் ஐந்தாம் தர மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் பாரிய பங்களிப்பினை ஆற்றிவருகின்றது.
குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பின்தங்கிய பகுதிகளை நோக்காக்ககொண்டு இவர்கள் செயற்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு கல்விப்பணியை மேற்கொண்டுவரும்போது மாணவர்கள் மத்தியில் பரீட்சைகளை நடாத்தி அவர்களை பரிசுகளை வழங்கி ஊக்குவித்துவருகின்றது.
இந்த அடிப்படையில் இந்த நிகழ்வில் பரீட்சைக்கு தோற்றி அதிகூடிய புள்ளிகளைப்பெற்ற மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வினை தென்றல் சஞ்சிகையின் ஆசிரிய பீட உறுப்பினரும் முன்னாள் அதிபருமான கலாபூசனம் கோபாலபிள்ளை தொகுத்துவழங்கினார்.
கொக்கட்டிச்சோலை இராம கிருஸ்ண வித்தியாலயத்தில் தென்றல் சஞ்சிகையின் ஆசிரியர் கிருபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
தென்றல் சஞ்சிகையானது தனது சஞ்சிகை வெளியீட்டைம ட்டும் கொண்டிருக்காமல் ஐந்தாம் தர மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் பாரிய பங்களிப்பினை ஆற்றிவருகின்றது.
குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பின்தங்கிய பகுதிகளை நோக்காக்ககொண்டு இவர்கள் செயற்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு கல்விப்பணியை மேற்கொண்டுவரும்போது மாணவர்கள் மத்தியில் பரீட்சைகளை நடாத்தி அவர்களை பரிசுகளை வழங்கி ஊக்குவித்துவருகின்றது.
இந்த அடிப்படையில் இந்த நிகழ்வில் பரீட்சைக்கு தோற்றி அதிகூடிய புள்ளிகளைப்பெற்ற மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வினை தென்றல் சஞ்சிகையின் ஆசிரிய பீட உறுப்பினரும் முன்னாள் அதிபருமான கலாபூசனம் கோபாலபிள்ளை தொகுத்துவழங்கினார்.