சீனித்தம்பி யோகேஸ்வரனின் 45வது பிறந்தை முன்னிட்டு மட்டக்களப்ப இந்து மகளிர் மன்றத்தினால் கௌரவிப்பு

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரனின் தனது 45வது பிறந்த தினமான இன்று அவரை மட்டக்களப்பு இந்து மகளிர் மன்றம் கௌரவித்தது.


ஆனைப்பந்தி சித்திவிநாயகர் ஆலய வளாகத்தில் உள்ள இந்துமகளிர் மன்ற கட்டிடத்தில் நடைபெற்ற நிகழ்வின்போதே அவர் கௌரவிக்கப்பட்டார்.

தமிழினத்துக்கும் இந்து மதத்தின் வளர்ச்சிக்கும் அர்ப்பணிப்புமிக்க சேவையாற்றிவரும் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனை மன்றத்தின் சார்பாக வாழ்த்தி கௌரவிப்பதாக மன்றத்தின் தலைவி திருமதி மனோகரி சீவரெட்னம் தெரிவித்தார்.