மாமாங்கம் சதாசகாய மாதா பாலர் பாடசாலையின் மாணவர்களின் சிறுவர் சந்தை நிகழ்வு

(லியோன்)

மட்டக்களப்பு, மாமாங்கம் சதாசகாய மாதா பாலர் பாடசாலையின் மாணவர்களின் சிறுவர் சந்தை நிகழ்வு இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்றது.


பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களின் உளவளத்தினை மேம்படுத்தும் வகையில் இந்த சந்தை கண்காட்சி நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.

இதன் ஆரம்ப நிகழ்வில் மாமாங்கம் சதாசகாய மாதா ஆலயத்தின் பங்குத்தந்தை அருட்தந்தை பேதுரு ஜீவராஜ் அடிகளார் கலந்துகொண்டார்.

மட்டக்களப்பில் சிறப்பான முறையில் இயங்கிரும் பாலர் பாடசாலையான சதாசகாய மாதா பாலர் பாடசாலை சிறுவர்களின் மேம்பாட்டுக்காக பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டுவருகின்றது.

சிறுவர்களுக்கான விளையாட்டுப்போட்டிகள்,பரிசளிப்பு நிகழ்வுகள், சுற்றுலாக்கள்,சமய நிகழ்வுகள் உட்பட பல்வேறு நிகழ்வுகளை நடாத்திவருகின்றனர்.

இதன்கீழ் சிறுவர்களின் உளஆற்றுகைக்காகவும் அவர்களின் சமூகம் தொடர்பான எண்ணக்கருக்களை ஏற்படுத்துவதற்காகவும் இவ்வாறான நிகழ்வுகள் நடாத்தப்பட்டுவருகின்றன.