சிகிரியா ஓவியங்களை சேதப்படுத்தியதாக சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட மட்டக்களப்பை சேர்ந்த யுவதிக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலைசெய்ய நடவடிக்கையெடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மட்டக்களப்பு மாவட்ட சமூக விழிப்புணர்வு மன்றம் கடிதம் எழுதியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட சமூக விழிப்புணர்வு மன்றத்தின் தலைவர் பொ.மனோகரன் கையொப்பம் இட்டு அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மட்டக்களப்பு,சித்தாண்டியை சேர்ந்த செல்வி சின்னத்தம்பி உதயசிறி(27வயது) யுவதி கடந்த 14-02-2015 அன்று தன்னுடன் வேலைசெய்யும் நண்பிகளுடன் உல்லாசப்பிரயாணம் மேற்கொண்டு சிகிரியா ஓவியங்களை பார்iவிடச்சென்றபோது சிகிரிய ஓவியத்தின் மேல் எழுத்துக்களை எழுதினார் என்ற அடிப்படையில் கைதுசெய்யப்பட்டு 02-03-2015அன்று தம்புள்ள நீதிமன்றத்தினால் (வழக்கிலக்கம் 65381)இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டு அனுராதபுரம் சிறைச்சாலையில் சிறையிலடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்துவருகின்றார்.
இந்த யுவதியின் தந்தையின் மரணத்தின் பின்னர் வயது முதிர்ந்த கண்பார்வை குறைபாட்டுடன் நோய்வாய்ப்பட்டுள்ள நிலையில் உள்ள தனது தாயினை தனது வாழ்வாதார உழைப்பினூடாக பராமரித்து வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்துவரும் ஓரு ஏழை குடிமகளாவார்.இவரின் சிறைவாசமானது தாயின் வாழ்வில் மேலும் சிக்கலை ஏற்படுத்துவதுடன் இந்த யுவதியின் எதிர்கால வாழ்வும் சிக்கல் நிலைக்கு தள்ளப்படலாம் என்பதனை தங்களின் மேலான கவனத்திற்கு அறியத்தருகின்றோம்.
எனவே தண்டனை வழங்கப்பட்டு சிறைவாசம் அனுபவித்துவரும் சின்னத்தம்பி உதயசிறி என்னும் யுவதியை தனது அறியாமையினால் செய்ததாக கருதப்படும் தவறுக்காக மனம் வருந்துவதோடு எமது சமூக விழிப்புணர்வு மன்றமானது மட்டக்களப்பு வாழ் மக்களுடன் இணைந்து மன்னிப்பை கோருகின்றது.
எனவே இந்த யுவதியினதும் தாயினதும் எதிர்கால நலன் கருதி மட்டக்களப்பு மக்கள் தங்களின்மேல் வைத்துள்ள நம்பிக்கையின் அடிப்படையில் இந்த யுவதியின் விடுதலைக்கான கருணை மனுவை பரிசீலனை செய்து பொதுமன்னிப்பின் ஊடாக விடுதலையை பெற்றுத்தருமாறு மிகவும் தயவுடனும் தாழ்மையுடனும் தங்களிடம் பணிவாக கேட்டுக்கொள்கிறோம்.
யுவதியின் விடுதலைக்காக தாங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு மட்டக்களப் மக்கள் என்றென்றும் நன்றியுடன் இருப்பார்கள் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட சமூக விழிப்புணர்வு மன்றத்தின் தலைவர் பொ.மனோகரன் கையொப்பம் இட்டு அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மட்டக்களப்பு,சித்தாண்டியை சேர்ந்த செல்வி சின்னத்தம்பி உதயசிறி(27வயது) யுவதி கடந்த 14-02-2015 அன்று தன்னுடன் வேலைசெய்யும் நண்பிகளுடன் உல்லாசப்பிரயாணம் மேற்கொண்டு சிகிரியா ஓவியங்களை பார்iவிடச்சென்றபோது சிகிரிய ஓவியத்தின் மேல் எழுத்துக்களை எழுதினார் என்ற அடிப்படையில் கைதுசெய்யப்பட்டு 02-03-2015அன்று தம்புள்ள நீதிமன்றத்தினால் (வழக்கிலக்கம் 65381)இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டு அனுராதபுரம் சிறைச்சாலையில் சிறையிலடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்துவருகின்றார்.
இந்த யுவதியின் தந்தையின் மரணத்தின் பின்னர் வயது முதிர்ந்த கண்பார்வை குறைபாட்டுடன் நோய்வாய்ப்பட்டுள்ள நிலையில் உள்ள தனது தாயினை தனது வாழ்வாதார உழைப்பினூடாக பராமரித்து வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்துவரும் ஓரு ஏழை குடிமகளாவார்.இவரின் சிறைவாசமானது தாயின் வாழ்வில் மேலும் சிக்கலை ஏற்படுத்துவதுடன் இந்த யுவதியின் எதிர்கால வாழ்வும் சிக்கல் நிலைக்கு தள்ளப்படலாம் என்பதனை தங்களின் மேலான கவனத்திற்கு அறியத்தருகின்றோம்.
எனவே தண்டனை வழங்கப்பட்டு சிறைவாசம் அனுபவித்துவரும் சின்னத்தம்பி உதயசிறி என்னும் யுவதியை தனது அறியாமையினால் செய்ததாக கருதப்படும் தவறுக்காக மனம் வருந்துவதோடு எமது சமூக விழிப்புணர்வு மன்றமானது மட்டக்களப்பு வாழ் மக்களுடன் இணைந்து மன்னிப்பை கோருகின்றது.
எனவே இந்த யுவதியினதும் தாயினதும் எதிர்கால நலன் கருதி மட்டக்களப்பு மக்கள் தங்களின்மேல் வைத்துள்ள நம்பிக்கையின் அடிப்படையில் இந்த யுவதியின் விடுதலைக்கான கருணை மனுவை பரிசீலனை செய்து பொதுமன்னிப்பின் ஊடாக விடுதலையை பெற்றுத்தருமாறு மிகவும் தயவுடனும் தாழ்மையுடனும் தங்களிடம் பணிவாக கேட்டுக்கொள்கிறோம்.
யுவதியின் விடுதலைக்காக தாங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு மட்டக்களப் மக்கள் என்றென்றும் நன்றியுடன் இருப்பார்கள் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.