மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டுவெற்றிபெறுவேன் -முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்

எதிர்வரும் பொது தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெறுவேன் என நம்புவதாக முன்னாள் மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.


நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு கூறியுள்ளார்.

தான் தொடர்ந்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினராக செயற்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பொது தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு அதிக வாக்குகள் பெற்று தரும் பொறுப்பை தான் ஏற்றுக்கொள்வதாக மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.